Thursday, January 12, 2017

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

Image may contain: 1 person, close-up

1995 ரஹ்மானின் இசை பயணத்தில் பெஸ்ட் இயர் - பம்பாய், ரங்கீலா,இந்திரா, முத்து என வரிசையாக சூப்பர் ஹிட் ஆல்பம்ஸ்.

இளையராஜாவின் அறையில் எப்போதும் போல அமைதி.ஆனால் கங்கை அமரன் மட்டும் கோபத்தின் உச்சத்தில். "அண்ணேன் ! உங்களுக்கு ஏன் இந்த அல்ப புத்தி. நான் கஷ்டப்பட்டு பாக்யராஜ தாஜா பண்ணி அவன் படத்துல மியூசிக் பண்ண சான்ஸ் வாங்கினேன். இப்ப என்னடானா - அமர் நீ மியூசிக் பண்ணல. உங்க நோன்னேன் பண்ணட்டும் அப்படிங்கிறான்."

அறையின் ஓரத்தில் பாக்யராஜ் வெள்ளை கற்சிப்பில் கழுத்தை துடைத்து கொல்கிறார்.

"அப்படியே அந்த கற்சிப்ப குடு. தலையில போட்டுக்கறேன்."

மீண்டும் அறையில் அமைதி.

கடைசியாக இளையராஜா ஒரு முடிவுக்கு வருகிறார். "அமர். உனக்கு ஒழுங்கா பண்ண தெரிஞ்சது பாட்டு எழுதறது. இந்த படத்துல எல்லா பாட்டையும் நீயே எழுது." வந்த வரைக்கும் லாபம் என்று கங்கை அமரன் மண்டை ஆட்டுகிறார்.

படத்தில் எல்லாமே மாற்றி அமைக்கப் படுகிறது. ஹீரோயினியாக ஒப்பந்தம் ஆகியிருந்த ஸ்ரீதேவிக்கு பதில் மீனா ஹீரோயினி ஆகிறார். பாடல்களின் சவுண்ட் டிசைனில் கார்த்திக் ராஜா பெரும் பங்கு உண்டு. படத்தின் பெயர் - ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி.

படத்தில் வரும் இந்த பாடல் ராஜாவின் சவுண்ட் டிசைனில் இருந்து மிகவும் மாறுபட்டிருக்கும். டிம்பணி டிரம்ஸ் சவுண்ட் தூக்கலாக இருக்கும்.பாஸ் பாட்டேர்ன்ஸ் ஸிந்தசைஸிர் விளையாடும். பாலசுப்ரமணியம் - சித்ரா பாடவில்லை.மாறாக, மல்டி வாய்ஸ் இருக்கும்.முக்கிய இடங்களை மனோ-மின்மினி பாடியிருப்பர். Fillers இல் அருண்மொழி, S.N. சுரேந்தர், லேகா,தேவி பாடியிருப்பர். (என்னடா ரஹ்மான் டைப்ல இருக்கேனு யோசிக்க தோணும்.)

ஆனா ஒண்ணு. படத்துல எல்லாத்தையும் மாத்தினாலும் பாக்யராஜோட டான்ஸ மாட்டும்... இம்ம்ம்ஹும்ம்...

பீட்டர்ஸ்பர்க் ஏஜென்ட்

Image may contain: 2 people


1990ஆம் வருடம். சோவியத் ரஷ்யா உடைக்கப்பட்டு ரஷ்யாவில் குழப்பமான நிலை.முன்னால் சோவியத் உளவு ஸ்தாபனம் KGB யின் ஏஜென்ட் விளாடிமிர் வேலை இன்றி தன் சொந்த ஊர் பீட்டர்ஸ்பர்க் வருகிறான். அடுத்து என்ன செய்வது என்று அவனுக்கு பெரிய யோசனை இல்லை. காலேஜ் நாட்களில் அவனுக்கு பிடித்தனமான பேராசிரியர் அனடோலி சோப்சாக். அவர் ரஷ்யா அரசியலில் நுழைந்து கிடுகிடு வளர்ச்சியாக பீட்டர்ஸ்பர்க் மேயர் ஆக தேர்வாகியிருந்தார்சு. அவருக்கு வணக்கம் வைப்போமே என்று சோப்சாக்கை அவரது வீட்டில் சென்று சந்திக்கிறார்.
விளாடிமிரை பார்த்ததில் சோப்சாக்கு மிகுந்த சந்தோஷம். "இவ்ளோ நாள் என்னடா பண்ண. என்ன பாக்க வரலியே. படவா ராஸ்க்கல் ! "
"KGB உளவாளி.நாடு நாட சுத்தினேன்"
"போடா முட்டாள். KGBக்கு வேலை பார்த்தேன்னு இவ்ளோ ஓப்பனா சொல்ற. இடியட்"
"இதுல என்ன இருக்கு. இன்னைக்கு வேணா KGB யாருக்கும் பிடிக்காத கோஷ்டியா இருக்கலாம். ஆனா எனக்கு எல்லாத்தையும் கத்து குடுத்த இடம் அதான்."
"குட். கேள்விப்பட்டேன். ஊர்ல எந்த பொண்ணையும் விட்டு வெக்கலையாமே நீ... உன் அதிகாரி பொண்டாட்டி உட்பட. நாட்டி லிட்டில் பாய்."
சோப்சாக்ககுடன் இணைந்த விளாடிமிர், பீட்டர்ஸ்பர்க் மேயர் ஆஃபிஸில் அடிக்கடி காணப்படுகிறான். கிடுகிடு வளர்ச்சி. ஒரே வருடத்தில் முக்கிய கமிட்டிகளில் உறுப்பினர். துண்டு செய்தி - சோப்சாக்கு ஆத்துகாரி லிடமில்லா வுக்கும் வளடிமீர் ரொம்ப பிடுத்து போகிறது.
1992 - ஒரு வார கடைசி. விளாடிமிர் தனக்கு பிடித்த கராத்தே பயிற்சியில் இருந்தான்.சோபசாக்கின் உதவியாளர் அவசர அவசரமாக அய்யா அவரை பார்க்க வர சொன்னதாக சொல்கிறான்.
காரில் செல்லும் வழியில் உதவியாளன் புலம்புகிறான். "சண்டே யாரையும் அய்யா பாக்க மாட்டார். என்ன எழவோ தெரியல இன்னைக்கு காண்டுல இருக்கார்."
நமது மன்மத குட்டு தெரிந்து விட்டதோ என்ற சந்தேகத்தோடு வீட்டுக்குள் நுழைகிறான் விளாடிமிர்.
சோபசாக் ஏதோ பைலை படித்து கொண்டிருந்தார். "ஒக்காரு விளாடிமிர். என்ன குடிக்கற. பால் போதுமா இல்லை கூட பிரட் தர சொல்லட்டுமா."
விளாடிமிர் முழிக்கிறான். ஆனால் சோப்சாக் பேச்சில் ஏதோ பொறி தட்டுகிறது.
"இந்த ரிப்போர்ட் போன வருஷம் பீட்டர்ஸ்பர்க் மக்களுக்கு பால்,முட்டை,பிரட் இலவச விநியோகம் பத்தினது . ரிப்போர்ட் படி நடந்த ஊழல் 100 மில்லியன். ரிப்போர்ட் படி முதல் ஊழல் குற்றவாளி - எனது மாணவன் விளாடிமிர்."
ஒரு மணி நேரத்துக்கு பின்னர் சிரித்தபடியே ரெண்டு பெரும் வெளியே வருகின்றனர். அடுத்த சில மாதங்களில் சோபசாக் பாரிஸ் நகரில் மிக பெரிய வில்லா ஒன்றை வாங்குகிறார். விளாடிமிர் பெயர் ஊழல் ரிப்போர்ட்டில் இருந்து நீக்கப்படுகிறது. மாஸ்கோ கட்சி ஆபீஸ்க்கு பையன் நல்ல கெட்டிக்காரன் என்ற செய்தி போகிறது.
1997இல் பாரிஸ் வில்லாவில் போய்  சோபிசெக் காலத்தை கழிக்கிறார். விளாடிமிர் மாஸ்கோ செல்கிறான். மீண்டும் அரசியலில் கிடு கிடு வளர்ச்சி. வளர்ச்சியின் உச்சகட்ட மாக 2000 இல் ரஷ்ய ப்ரெசிடெண்ட்.
இப்படிபட்ட விளாடிமிர் புடின் உடன் டொனால்ட் டிரம்ப் கூட்டு சேருவது இயல்பு தான். இனம் இனத்துடன் சேரும்.சேரும் சகதியாகி போகும்.

பின்னால் சேர்க்கப்பட்ட முன் குறிப்பு: போட்டோ வில் இருக்கும் அம்மணி - லிடமில்லா.

Saturday, September 27, 2014

ரஹ்மானின் அசுர புலம்பல்

சமீபத்தில் ஒரு திரை பாடல் பலரை பித்துப்பிடித்து , கிறங்கடித்து, லூசாக்கி விட்டுருக்கிறது. இந்த பதிவு "என்னோடு நீ இருந்தால்" பற்றியது.



"என்னோடு நீ இருந்தால்" பாடல் பற்றி சிலாகிப்பதற்கு முன்னால், டான் ப்ளாக் (Don Black) ரஹ்மான் பற்றி கூறியதை பார்த்தாக வேண்டும். ரஹ்மான் இசை அமைப்பு முறையை பற்றிய மிகச் சரியான விவரிப்பாக எனக்கு இதுபட்டது. டான் ப்ளாக் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. ஆஸ்கார் விருது பெற்ற பாடல் எழுத்தாளர். 1967ஆம் ஆண்டு Born Free படத்திற்கு சிறந்த பாடலாசிரியர்  ஆஸ்கார் வென்றவர்.

டான் ப்ளாக்கின் ரஹ்மான் இசை அமைப்பு முறை பற்றிய வர்ணனை இவ்வாறாக அமையும்.

"ரஹ்மான் கையால்வது போன்ற ஒரு இசை அமைப்பு முறையை அதற்கு முன் நான் பார்த்தது இல்லை. அவர் ஸ்டூடியோவில் நுழைவதற்கு முன்னால் செருப்பை வெளியே கழட்டிவிட வேண்டும். ஸ்டூடியோ அறையில் எப்பொழுதும் ஒரு மெழுகு எறிந்து கொண்டிருக்கும். பிரமாதமான ஒரு இசை கோர்வை அமைந்து கொண்டிருக்கும் போதே திடீரென்று ஸ்டூடியோ அறையை விட்டு வெளியே செல்வார்.திரும்ப வரும் பொழுது, சிரித்து கொண்டே தொழுகையில் ஈடுபட்டதாக சொல்வார்.

மேல் சொன்ன வர்ணனை ரஹ்மான் பற்றி ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இது போன்ற eccentrics எல்லா இசை அமைப்பாளர்களிடமும் உண்டு. இதற்கு அடுத்து டான் ப்ளாக் சொல்லும் விஷயம் தான் ரஹ்மான் இசை அமைப்பை நெற்றியடியாக விவரிக்கும்.

"ஒவ்வொரு பாடல் இயற்ற நாங்கள் சந்தித்த போதும் அவருடைய எண்ண ஓட்டம் ஏதேனும் ஒரு ஒற்றை புள்ளியை நோக்கியே செல்லும். அந்த ஒற்றை புள்ளியானது ஒரு வார்த்தையாகவோ, வரியாகவோ இருக்கும். அந்த ஒற்றை புள்ளியின் மேல் அவர் மெனக்கெட ஆரம்பிப்பார். கீபோர்டில் அந்த ஒற்றை புள்ளியை முனகிக் கொண்டே விளையாடுவார்."

ரஹ்மான் கீபோர்டில் விளையாடி கொண்டே முனகும் பிம்பத்தோடு மேலும் படியுங்கள்.

"ரஹ்மான் எந்த ஒரு புற சூழ் நிலையும் அவரை பாதிக்க விடமாட்டார். அவரை பொறுத்த வரை It has to happen.ரெக்கார்டிங் செஷன் ஒன்றிற்கு நாற்பது வயிலின் கலைஞர்களை அழைத்து விட்டு அவர்களுக்கு வாசிக்க ஒரு நோட் கூட இல்லாத சூழ் நிலையை ரஹ்மானோடு நான் சந்தித்தேன். ஆனால் அந்த ஒற்றை வரி முனகலில் ஆரம்பித்து 30 நிமிடங்களில் 40 வயலின்கள் முழங்க அற்புதமான ஒரு இசை கோர்வையை இசைத்து காட்டினார்."

மேல் சொன்ன விவரணை உங்களுக்கு புரிந்தால் ரஹ்மான் இசை உங்களுக்கு இன்னும் நன்றாக புரிய ஆரம்பிக்கும்.
  • சின்ன சின்ன ஆசையின் interludeல் வரும் ஏலேலோ ஹம்மிங்
  • டேக் இட் ஈசி ஊர்வசி தொடக்கத்தில் வரும் மறுகபா ஹம்மிங்

போன்றவை வெறும் ஹம்மிங் இல்லை. ரஹ்மான் இசை அமைப்பு முறையின் சுவடுகள். இது போன்ற ஒற்றை வரியை எடுத்து கொண்டு அதன் மீது improvise செய்வது ஹிந்துஸ்தானி,சுபி இசை அமைப்புகளில் பிரபலம். ஹரிஹரன் ரஹ்மான் பாடல்களில் ஸ்பெஷலாக இருப்பதற்கு காரணமும் இதுதான். Rahman's music has hell lot of space to improvise.

இப்பொழுது "என்னோடு நீ இருந்தால்" பாடலை இன்னொரு முறை கேட்டு பாருங்கள். ரஹ்மான் கீபோர்ட முன் அமர்ந்து புலம்புவது போன்ற பிம்பம் விரிகின்றதா ?

"என்னோடு நீ இருந்தால்" ஜாஸ் (jazz) இசை சார்த்து. ஜாஸ் இசை அமைதி அற்ற நிலையை விளக்க பெரிதாக பயன்படுமாம். "Jazz is restless. It won't stay put and it never will." Jazz,Reggae,Irish-folk ஆகியவை தனக்கு பிடித்தவை என்று ரஹ்மான் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். இன்பாக்ட் "சின்ன சின்ன ஆசை" பாடலில் ரெக்கே இசை சாயல் உண்டாம்.

"என்னோடு" பாடலை கேட்கையில் இருள், வலி, அமைதி அற்ற நிலை இவை கொண்டு ஒருவன் பாடும் புலம்பலாக பட்டது. "என்னோடு நீ இருந்தால்" என்ற ஒற்றை புள்ளியில் சிட் ஸ்ரீராம் மறுகி உருகி பாடியிருக்கிறார். "தம்பி சிட்! பீர் சிகரட்னு கெட்ட பழக்கம் பக்கம் போய் குரலை உட்றாத. You have a magic in it, unlike anything else."

ஆனால் பாடலில் எனக்கொரு மிகப்பெரிய குறை. சத்தியமா ஒரு வரி கூட தெளிவா புரியல. ஒரு பீலிங் கொண்டு வர வேணும்னே செய்ததா என்னேனு புரியல. ஆனா இதே மாறி போனா நிச்சயமா தமிழ் இனி மெல்ல சாகும்.

கபிலன் எழுதிய பாடல் வரிகளை தேடித் படித்தேன். Nothing special in it. இருளுக்கும் வெளிச்சதிற்குமான ஒரு சண்டையை,வலியை பெரிதாக வரிகள் உணர்த்தவில்லை. நான் ஒரு வைரமுத்து வெறியன் என்பதனால் அப்படி பட்டதோ ? Anyways, its personal preference.

"என்னோடு நீ இருந்தால்" ரஹ்மான் என்ற ராட்சதனின் அசுர புலம்பல். காலத்திற்கும் ஒலிக்கும்.


Monday, September 22, 2014

சின்ட்ரெல்லா (என்னும் ராட்சஷி)


"ஓட்ற ட்ரெயின்லேந்து தள்ளி உட்ருவோம்."

"அவன் பிரியாணிக்கு உயிரையே விடுவான். அந்த பிரியாணிலயே விஷம் வச்சு உயிர எடுத்திடுவோம்."

"அதெல்லாம் சரிப்படாது. சிம்பிளா மணல் லாரி ஏத்து."

தீனா எல்லாவற்றையும் கேட்டவாறு அமைதியாக கீழே பார்த்து கொண்டிருந்தான்.

"இதெல்லாம் ஒர்கவுட் ஆகாதுன்னா ஒரு செம விஷயம் சொல்றேன். கொரியன் சைக்கோ படத்துல பார்த்தது."

"டேய் ! சும்மா காமெடி பண்ணாதீங்க. இது ஒரு பாண்டஸி படம். அதுக்கு ஏத்த மாதிரி எதாவது உருப்படியா யோசிங்கடா."

எதாவது புதுமையான யோசனை சிக்காதா என்ற தீனாவின் ஆதங்கம்.

"நாளைக்கு சாயங்காலம் கிளைமாக்ஸ் சீன் டிஸ்கஷன். எதாவது உருப்படியா பாயிண்ட் சொல்லி டைரக்டர கவுக்கனும்.

"இந்த பாயிண்ட் கேள்..."னு ஒரு சகா சொல்லும் போதே தீனாவின் செல்போன் ஒலித்தது. சுவேதா. காலையிலேந்து மூணு தடவை கால் பண்ணிட்டா. இதுக்கு மேல எடுக்கலேனா பிரச்சனை ஆயிடும்னு தீனா வெளியே வந்தான்.

"ஹலோ ! எத்தனை தடவை கூப்பிட்றது". சுவேதா கோபம் காட்டினாள்.

"மூடு சரி இல்ல. எதுக்கு போன் எடுத்து உன்னை வெறுப்பேத்தனும்னு விட்டுட்டேன்."

"போடா லூசு. நீயும் உன் மூடும். எங்க வீட்ல என்னாச்சு தெரியுமா ?"

"மெகா சீரியல் பார்க்கும்போது கரண்ட்போயிடிச்சா !"

"அய்யோ ! நான் கர்ப்பமா இருக்கேன்னு அப்பாகிட்ட சொல்லிட்டேன்."

புஜம் பொருந்திய ஹிந்தி வில்லன் கம்பியால் நச்சென்று நடு மண்டையில் அடித்தது போல இருந்தது தீனாவிற்கு.

"என்னமா சொல்ற !"

"நான் என்னடா பண்றது. நாம லவ் பண்றது எங்க வீட்டுக்கு தெரிஞ்சு ஆறு மாசமாகுது. அப்பாகிட்ட வந்து பேசுன்னு எவ்வளவோ சொல்லியும் நீ கேக்கல."

தீனா சுதாரித்து காம்பௌண்ட் கேட்டை பிடித்து கொண்டான்.

"இன்னைக்கு அப்பா ஓவரா போயி அவரோட நண்பர், அவர் பையன்னு ஒரு கோஷ்டிய கூட்டிட்டு என்னை பொண்ணு பார்க்க வர வெச்சுட்டாரு."

ரூமிலிருந்து நண்பர்கள் ஒவ்வொருவராக வெளியே கசிய தொடங்கினர்.

"அதான் ஒரு பொய் சொல்லி அவர வெறுப்பேத்திட்டேன்."

"பொய்யா..." தீனாவின் நிம்மதி பெருமூச்சு.

"ஆமா நீ என்ன நினைச்ச."

"சே ! சே ! நான் என்ன நினைக்கறது."

"ஆனா அப்பா நான் எதிர்பார்த்ததுக்கு மேலே டென்ஷன் ஆகிட்டாரு. அவர் பாக்டரில வேலை பாக்கற பசங்களுக்கு எல்லாம் போன் பண்ணி வர வெச்சிருக்காரு"

"அடிப்பாவி. நான் தீனாவ தான் கல்யாணம் பண்ணுவேன். இல்லேனா வெஷம் குடிச்சிடுவேன்ற மாதிரி பிரச்சனை இல்லாத டயலாக் பேசியிருக்கலாம். பேபி-ப்ரக்னன்ட்னு தேவையில்லாம வாயை குடுத்து என்னை அடி வாங்க வைக்கறியே."

"அதான் காலையிலேந்து போன் பண்ணிகிட்டே இருந்தேன். நீ ரூம்ல இருக்காத. எங்கயாச்சம் வெளிய போய்டு. நான் அப்பாகிட்டே பேசி சமாளிச்சிட்டு உனக்கு போன் பண்றேன்"

"உங்க அப்பா அனுப்பற ஆளுங்க என்னை உயிரோட விட்டா போன் எடுக்கறேன்,"

"அழாதடா."

"போடி ! நல்லா மாட்டிவிட்டுட்டு அட்வைஸ் வேற குடுக்கற."

தீனா சகாக்களிடம் ஏதோ பொய்யை சொல்லி சமாளித்துவிட்டு பைக்கை கிளப்பிக்கொண்டு பறந்தான். 300சிசி பைக் வாங்கியது உபயோகமாகவே இருந்தது.

மதிய உணவு வேலை நெருங்கி இருந்ததால் அந்த டீக்கடையில் அவ்வளவாக டீ செல்லுபடியாகியிருக்க கூடாது.

"சினிமா துணுக்கு எழுதறது லேசுன்னு நினைச்சியா ! ஒவ்வொரு துணுக்கும் ஒரு மினி ஸ்க்ரீன்ப்ளே". சத்யன் மெய்யாகவே ஆதங்கப்பட்டார்.

சிகரெட் புகைப்பவர்கள் புகையை சமன் செய்ய டீயையே விரும்புகின்றனர். டீ மாஸ்டர் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்.

"என்ன இருந்தாலும் ஒருத்தன பத்தி தப்பா எழுதறது தப்பு தான சத்யன்."

ரிப்போர்ட்டர் சத்யனுக்கு இது ஒரு பிடித்தமான கேள்வி. தேர்ந்த மேடை பேச்சாளர் தோரணையில் இதற்கு பல முறை பதிலளித்திருக்கிறார்.

"என்ன பாவம். ஒரு சம்பவம் நடக்குது. அத மக்கள் விரும்பற மாதிரி விதத்தில நாங்க எழுதறோம். அவ்வளோதான். இதுல என்ன தப்பு இருக்கு."

சிகரெட்டை சீராக இழுத்து விட்டுக்கொண்டார்.

டீக்கடைக்கு முன் பைக்கை நிறுத்திய தீனா, பைக் சாவியை பிடுங்கிய வாறே சைடு ஸ்டான்ட் போட்டு கீழே இறங்கினான். பின்னால் மறைவாக வந்து நின்ற காரை அவன் கவனித்திருக்க வாய்ப்பில்லை.

ரிப்போர்ட்டர் சத்யன் கடை ஓரமாக நின்று கொண்டு யாருடனோ பேசிகொண்டிருந்ததை பார்த்தான். யதேச்சையாக அவரும் தீனாவை பார்த்து கை காட்டினார்.

"என்ன சார் ! ஓரமா நின்னு யார பத்தி புகைச்சிட்டு இருக்கீங்க."

"போன வாரம் ஒரு ட்விட்டர் கவிதை போட்டிருந்தேனே, பாக்கலையா ?"

"இல்லையே."

"சுவாரஸ்யம் !
பேருந்தின் ஜன்னலோரம்
பீட்சாவின் கருகிய ஓரம்
டீக்கடையின் ஆளில்லா ஓரம் !"

"சூப்பர். இதுக்கு முன்னபின்ன எதாவது கோரஸ் சேத்து கத்தவிட்டு வீடியோ எடுத்திட்டா அடுத்த கொலை வெறி இதான்."

அப்பொழுது எழுந்த சிரிப்பொலி அப்படி சட்டென்று நிற்கும் என்று தீனா எதிர்பார்க்கவில்லை. நீண்ட முடி தரித்த முரட்டு ஆசாமியின் கத்தி வீச்சு வயிற்று ஓரத்தை கடந்து குருதியை எட்டிப் பார்க்க வைத்தது.

விடாமல் சிணுங்கிய செல்போனை குளித்து கொண்டிருந்த சுவேதா ஓடி வந்து எடுத்தால். "ஹலோ ! சுவேதா இருக்காங்களா ?"

"என்ன தீனா புதுசா கேக்கற. குரல் வேற மாதிரி இருக்கு."

"நான் தீனா இல்லைங்க. கேளம்பாக்கம் பிரிட்ஜ் பக்கதிலேந்து பேசறேன். இங்க ஒரு பைக்,போன் எல்லாம் தனியா கீழ கடக்குது. சுத்தி ரத்த கரையா இருக்கு. ஏதோ ஆக்சிடெண்டுனு நினைக்கிறன். ஆனா பக்கத்தில யாரும் காணும். போன் எடுத்து பாத்ததுல கடைசியா உங்க நம்பர்லேந்து தான் கால் வந்திருக்கு."

சுவேதாவின் படபடப்பில் அவள் கட்டியிருந்த துண்டு மெல்ல அவிழ தொடங்கியது - கடவுளே ! இந்த பைத்தியம் தப்பிக்க தெரியாம அப்பா ஆளுங்க கிட்ட மாட்டிகிட்டான் போல.

முடிவுக்கு வந்தவளாக அவசர கதியில் உடை அணிந்து ஸ்கூட்டி சாவியை எடுத்து கொண்டு வெளியேறினால். லேசாக தலை சுற்றியது.

மருத்துவமனையின் அடங்கா பரபரப்பிலும் டாக்டர் சுரேஷ் அமைதியாக இருந்தார். அவர் கையில் சுடச்சுட வந்திருந்த பேஷன்ட் சத்யனின் ரிப்போர்ட்.

"கத்தி நல்ல வேளை குடலை ரொம்ப குத்தி புண்படுத்தல. ரத்தம் வெளியேறி இருக்கு. கட் வூண்ட் ஸ்டிட்ச் போட்டிருக்கோம். ஆனா பெரிசா ஒண்ணும் கவலைப்படறதுக்கு இல்லை."

டாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்த தீனா, தெரிந்த முகம் ஸ்ட்ரெட்சரில் போவதை கண்டு அதிர்ந்தான். ஸ்ட்ரெட்சரில் சுவேதா.

சுவேதா நினைவு திரும்பிய போது அறையின் மெதுவான ஏசி சத்தம் கேட்டது. பினாயில் வாசம் வேகமாக நாசியில் நுழைந்து முழிப்பை அவசரப்படுத்தியது. படுக்கை அருகில் கலங்கிய நிலையில் தீனா.

"நீ எப்படி இங்க." சுவேதா.

"நீ எப்படி கேளம்பாக்கம் பிரிட்ஜ் பக்கத்தில ஸ்கூட்டில விழுந்து கெடந்தேன்னு நான் தான் உன்ன கேக்கணும்." இருக்கற பிரச்சனை போதாதுன்னு இது வேறயா என்பது மறை கேள்வியாக இருந்தது.

"எங்க அப்பா ஆளுங்க கிட்ட நீ மாட்டலையா ? "

ரிபோர்ட்டர் சத்யன் அந்த பிரபலத்தின் மீது எழுதிய துணுக்கு அவரை ரொம்பவே பாதித்திருந்தது. முரட்டு ஆசாமியை வைத்து கத்தியால் வஞ்சித்துவிட்டார். அருகிலிருந்த தீனா அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தான். அப்போது அவசரத்தில் கீழே விழுந்தது செல்போன். யாரோ ஒரு அதிகப்பிரசங்கி போனை எடுத்து சுவேதாவை அழைக்காமல் இருந்திருந்தால் பிரச்சனை குறைந்திருக்கும். விதி ! தீனாவை தேடி பதற்றத்துடன் ஸ்கூட்டியில் வந்த சுவேதா பிரிட்ஜ் அருகே மயங்கி விழுந்திருந்தால்.

குளுகோஸ் பாட்டில் சரி செய்ய வந்த நர்ஸ் கோபம் தாங்க முடியாமல் கேட்டுவிட்டால்.

"ஏம்மா ! கர்ப்பமா இருக்கும் போது வண்டி ஓட்டலாமா ! எதாவது ஆகியிருந்தா எவ்வளோ கஷ்டம்."

"என்ன சொல்றீங்க ! நான் கர்ப்பமா இருக்கேனா ?"

"சரியா போச்சு ! உங்களுக்கு தெரியும்னு நினைச்சேன். உங்கள சேர்க்கும் போது எடுத்த ரிப்போர்ட்ல வந்திருக்கு. நீங்க ரெண்டு மாசம் கர்ப்பம்."

பின் குறிப்பு:
இந்த கதையின் தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் குழம்பியிருக்கலாம். தொடர்பு உண்டு. தீனா கிளைமாக்ஸ் காட்சி யோசித்து கொண்டிருந்த வெளி வராத படத்தின் பெயர் "சின்ட்ரெல்லா என்னும் ராட்சஷி".

Tuesday, September 16, 2014

ஷங்கரின் காண்டிலீவர் பிரா



Scarface - அல்பசினோ நடித்த 1983ஆம் ஆண்டு படமாகத்தான் பிரபலம். உண்மையில் அது ஒரு ரீமேக். 1932ஆம் ஆண்டு வெளிவந்த அதே பெயிரிலான ஐகானிக் படத்தின் ரீமேக். சரி, Scarface புராணம் இப்போ ஏன் ? 1932ஆம் பதிப்பின் தயாரிப்பாளர் ஹோவர்ட் ஹுக்ஸ் (Howard Hughes). "அட ஆமால !"  சொன்னிர்களா ? இல்லனாலும் பரவாயில்ல. தொடர்ந்து படியுங்கள்.

ஹோவர்ட் ஒரு லட்சிய வெறியன். வெறியனை அடிக்கொடிட்டு படிக்கவும். ஆபிஸ் போய்டு வந்து, பத்து பக்கமேனும் படித்து, ரெண்டு FB அப்டேட் போட்டு, வாரம் ஒரு ப்ளாக் போஸ்ட் எழுதி, அந்த வாரம் வந்த படம் பார்த்து, பஜகோவிந்தம் எழுதியது 8ஆம் நூற்றாண்டா 9ஆம் நூற்றாண்டா என்று தேடிப்பிடித்து வாழ்பவனை கூட - "எப்படிப்பா உன்னால மட்டும் இவ்ளோ விஷயம் செய்ய முடியுது" என்று வியப்போற்கு ஹோவர்ட் ஒரு விசித்திர ஜந்து. உலகின் மிகபெரிய விமான கம்பெனி முதலாளி, விமான வடிவமைப்பு  பொறியாளன், ஆகச்சிறந்த விமான ஓட்டி, சினிமா இயக்குனர், தயாரிப்பாளர், 19 வயதில் அறக்கட்டளை ஆரம்பித்தவன், அரசியல் சாணக்கியன், வாரம் ஒரு பெண்ணை மணக்கும் ரோமியோ என்று பிரமாத படுத்திய மனுஷன்.

Aviator சினிமா பார்த்தீரா ? ஆமா... யு காட் தி பாயிண்ட். Aviator படம் ஹோவர்ட் ஹுக்ஸ் வாழ்க்கை சித்திரம். அசல் உலக டிகாப்ரியோ இப்படி இருப்பான் .


Aviator படத்தில் ஹோவர்டின் வெறிபிடித்த சினிமாகாரன் என்ற கோணம் அற்புதமாக சித்திரிக்கபட்டிருக்கும். உதாரணத்திற்கு படத்தில் ஒரு வசனம் -
"All right Boys ! I want to bring up something like this. Should give proper uplift ratios and reduce need for torque support on the front. We are not getting enough of the breasts"

இவர் எடுத்த The  Outrage என்ற படத்தில் ஹீரோயினி மார்பகம் சரியாக படம் பிடிக்க பிரத்யோக காமிரா வடிவமைத்து, இன்றளவும் பெண்கள் அணியும் காண்டிலீவர் கப் பிராவை வடிவமைத்தான். டேய் ! சத்தியமா சொல்றேன், ஹோவர்ட் நீ ஒரு கலா ரசிகன்டா.

அது சரி, ஹோவர்ட் ஹுக்ஸ் பத்தின குபீர் செய்தி ஏன் ?

'ஐ' !

'ஐ' trailer பார்த்தேன். ஷங்கரின் ஹோவர்ட் ஹுக்ஸ்தனம் கொப்பளித்தது. மெனகெடுதல் - இது தான் வேணும் பிடிவாதம் - காத்திருக்கும் கொக்கு. மாண்டேஜ் ஷாட்களாக  ஓடின.


ஷங்கரின் எந்திரன், சினிமா வெறியர்களால் கிழித்து கோமணமாக்கப்பட்ட படம். படத்தில் ஏகப்பட்ட ஓட்டை ஒடசல்கள் உண்டு. முதல் ஓட்டை ரஜினி உட்பட. ஆனால் கதை கரு பிரமாதமாக இருக்கும்.

Humanoid - மனிதனால் படைக்கப்பட்ட மனிதனை போன்ற ஜந்து. Man plays a silly God through Humanoids. அவைகள் செய்ய தகாதது ஏதும் உண்டா ? பல உண்டு. முக்கியமாக ரெண்டு - காதல், சூது. இவை இரண்டும் அதற்கு இயல்பாய் வராது. வரவைத்தால் ? அசிமோவ் விதி மீறல் செய்தால் ? என்னாகும் ?

சிலபல பத்தாண்டுகளுக்கு பிறகு எந்திரனுக்கு யாரேனும் மறு உயிர் பாய்ச்சலாம். 1932ஆம் Scarfaceஐ மிஞ்சிய 1983ஆம் ஆண்டு Scarface போல அதுவும் பலே வெற்றி பெறலாம் !

பை தி பை - 'ஐ' கதை கருதான் என்ன ?

படத்தில் விக்ரம் ஒரு மாடல். மாடலிங்கில் வெற்றி பெற உடம்பை வில்லாக வளைக்கிறார். அளந்து அளந்து சாப்பிடுகிறார் -  ஸ்டேராய்ட்ஸ் (Steroids) உட்பட. அளவுக்கு மிஞ்சிய அமிர்தம் நஞ்சு. Steroids விக்ரம் உடல் கூரை மாற்றுகிறது. குரங்கு மனிதனாகிறார். குரங்கு சேட்டை  ஆரம்பம் !


Tuesday, July 29, 2014

THE DAWN OF THE PLANET OF THE APES


THE DAWN OF THE PLANET OF THE APES

{STARRING TEAM INDIA}


DHONI AS CAESAR












Control your emotion. Less emotion more work !













KOHLI AS KOBA






Wait till i get to the top and make you pay for treating me like shit.







RAINA AS MAURICE (close friend and adviser)

















Dude ! When are you going to get me into Test team.








SIR JADDU AS BLUE EYES (CAESAR'S CONFUSED SON)




(Complains to Dhoni)
Boss... that Kohli keeps making pep talks to me in locker room. He even asked to start thinking on my own. I'm confused.





UNMUK CHAND AS  GREY (FOLLOWER OF KOBA)









(Over heard Kohli advicing him...)
What the fuck...Didn't find single wrong report about you in media in last six months ! Buck up Dude. You are supposed to be part of my dream squad.












Note - Ishant Sharma came very close to landing a role. But under performed at last minute to miss out.



(All pun intended)

Monday, July 21, 2014

லார்ட்ஸ்: இந்திய-இங்கிலாந்த் இரண்டாவது டெஸ்ட் - நான்காம் பார்வை


லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு விசேஷ பின்பற்றுதல் உண்டு. அன்றைய ஆட்ட தொடக்கத்தை யாரேனும் ஒரு பெரிய மனுஷர் மணி அடித்து தொடங்கி வைப்பார். நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கி வைத்தது சாட்ஷாத் நமது கபில்தேவ். இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே ஒரு உற்சாக டானிக்.

விஜய்-தோனி மட்டை ஜோடி களம் இறங்கியது. நேற்றைய தினமே தோனி மயிரியழில் உயிர் தப்பி இருந்தார்.ரொம்ப நேரம் தாக்கு பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்கவில்லை. எதிர்பார்த்தபடியே தட்டி தடவி ஆடி, ஒரு வழியாக சிலிப் கேட்ச் குடுத்து வெளியேறினார். புது பந்தை எடுக்க இன்னும் ஏழு ஓவர் பாக்கி. "முடிஞ்சா எதாவது பண்ணு" என்ற ரீதியில் மொயின் அலிக்கு பந்து வீச பணித்தார் குக். அங்கதான் அவருக்கு அடிச்சுது பம்பர் லாட்டிரி. ஒத்த ரன் கூட அடிக்காத நிலையில் ராஜர் பின்னி "அடிக்கறேண்டா உன்னை பிண்ணி"  என்று அடிக்க போக மிட்-ஆப்ல் கேட்ச். இது அநேகமாக இந்த பயணத்தில் பின்னியின் கடைசி ஆட்டமாக அமையும். I will be happy if Binny proves us wrong !

இந்தியாவை கரையேற்றும் பொறுப்பு முழுவதும் விஜய்-ஜடேஜா ஜோடி மீது விழுந்தது. இருவருமே அக்னி நட்சத்திரம் கார்த்திக்-பிரபு ரீதியில் ஆரம்பித்தனர். ஆம் ! ஜடேஜா அழைத்த ரன்னிற்கு மறுத்த விஜய்; சரமாரியாக விலாச முயன்ற ஜடேஜாவை கண்டித்த விஜய்; இருவருமே வெளிப்டையாக கடுப்பை வெளிக்காட்டினர் ! North meets South ! இன்னைக்கு வெளங்கின மாறி தான் என்று தோன்றியது. அங்க தான் ஒரு அற்புத திருப்பம். இந்த ஜோடி இணைந்து ஆடியது 6 ஓவர்களே ஆனாலும் அதன் பாதிப்பு அதை கடந்தது. விஜய் தனக்கே உரிய நேர்த்தியான ஆட்டத்தை தொடர்ந்தார். மறுபுறம் சரமாரியாக விலாசினார் ஜட்டு. சிரித்த முகமாக இருந்த குக் சற்றே  முறைக்க தொடங்கினார். லார்ட்ஸ் பால்கனியில் இருந்து தோனி சற்றே அமைதி ஆனார். (அவரு என்னைக்கு டென்ஷன் ஆனார்!)

இங்கேதான்  விஜய்யின் பழைய கெட்ட பழக்கம் அவரை வழுக்கிவிட்டது. ஆப் ஸ்டம்ப் வெளியே பாலை தேமேயென நல்ல பிள்ளையாக விட்டுக்கொண்டிருந்தவர் , திடிரென தேவையில்லாமல் மட்டை கொடுத்து மாட்டிக்கொண்டார். துள்ளி குதித்தார் அண்டர்சன் ! லார்ட்ஸ் சதத்தை தவற விட்டார் விஜய் ! A beautifully poised partnership was cut short brutally !

235/7. தலைக்கு மேலே வெள்ளம் போயாச்சு - இனி அதிரடி தான் ஒரே வழி என்று ஆட தொடங்கினார் ஜட்டு. சும்மா சொல்லக்கூடாது  மனிஷன் இங்கிலாந்த் பந்து வீச்சாளர்கள் கண்ணில் விரலை உட்டு ஆட்டிட்டார். உங்கூட்டு அடி எங்கூட்டடி இல்ல - மரண அடி. பிராடை தலைக்கு மேலே ஒரு சாத்து - அண்டர்சன்னை எறங்கி வந்து எக்ஸ்ட்ரா கவர் நோக்கி ஒரு மொத்து என்று பிரமாத படுத்தினார். இங்கிலாந்த் அணிக்கு கண்ணில் பொறி தட்டியது. இதனாலேயே என்னோவா, புவனேஸ்வர் குமார் கொடுத்த வாய்ப்பை, சிலிப்பில் அலேக்காக தவற விட்டார் ரூட். இந்தியாவின் அப்போதைய நிலை 246/7. A crucial lapse in the most crucial juncture of the game !

பிராட் புது பந்தை சரியாக பயன்படுத்துகிறாரா என்ற கேள்வி எல்லார் மனதிலும். ஸ்டோக்ஸ் அடிக்கடி ஆடுகளத்திலிருந்து மாயமாக மறைந்தார்.
தெம்பாக தொடர்ந்த இந்திய ஜோடி, இங்கிலாந்த் அணியின் இந்த பிரச்சனைகளை பூதாகாரபடுத்தியது. மூன்றாவது ஆட்டத்திற்கு இதே இங்கிலாந்த் அணி தொடருமா என்பது சந்தேகம் ! விடிவெள்ளியாக பிளாங்கெட் நன்றாகவே பந்து வீசினார். ஜட்டு அரை சதத்தை 42 பந்துகளில் அடித்து தூள் செய்தார். மறுமுனையில் குமார் சூடுபிடிக்க, இந்தியாவின் லீட் 300ஐ தாண்டியது. Mission accomplished for India !

இங்கிலாந்தை நொந்து நூடில்ஸ் ஆக்கிய பின்னர் ஜட்டு 68 ரன்னிற்கு அவுட். Perhaps the finest innings of Jaddu's career so far ! கலக்கிட்டீங்க சர் ஜட்டு. திரும்பி பார்பதற்குள் குமாரும் 50 அடித்திருந்தார். ஒரு வழியாக 318 ரன் முன்னிலையில் ஆட்டம் இழந்தது இந்தியா. அழகிய எண் விளையாட்டு - இங்கிலாந்த் முதல் இன்னிங்க்சில் எடுத்த ரன்கள் 319.

150 ஓவர்களில் - 319 ரன்கள் இலக்கு - 2.2 ஓவருக்கு/ரன் சராசரி - அப்பப்போ எகுரும் பந்து - 5ஆம் நாள் ஆட்டத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகம் - குமாரின் பந்து வீச்சை மட்டுமே நம்பியிருக்கும் இந்தியா - கடைசி ஆள் வரை திறமையான மட்டையாலர்கள் - வெற்றி யார் பக்கம் - Looks like a very complex equation என்று சுவாரஸ்யமாக தொடங்கியது நான்காம் இன்னிங்க்ஸ்.

இங்கிலாந்தின் முதல் இலக்கு - 8 ஓவர் - தேநீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல்இருப்பது. குமார்-ஷாமி பந்து வீச்சு பெரிதாக எடுபடவில்லை. 6வது ஓவர் புது பந்தில் வீச வந்தார் ஜட்டு. முதல் பந்து - நேராக ஆப் ஸ்டம்ப் நோக்கி - Padஐ துருத்தி ஆடிய ராபின்சன் தனக்கே பாடை கட்டிக் கொண்டார். LBW - 12/1.

தேநீர் இடைவேளைக்கு பின் ஜட்டுவின் சுழல் பந்தை ஆட ரொம்பவே தடுமாறினர். ஆனால் சீக்கரமே சுதாரித்து கொண்டது குக்-பாலன்ஸ் ஜோடி. இஷாந்த் ஷர்மா ஒரு சில லட்டு பால்கலை போட்டு அவர்களை ஆசுவாசபடுத்தினார். தோனியின் எந்த பாச்சாவும் பலிக்கவில்லை - 50 ரன்களை தொட்டது இங்கிலாந்த். குக் நன்றாகவே ஆடத் தொடங்கினார். கடைசியாக மனம் வந்த தோனி,  செல்லபிள்ளை ஜட்டுவிடமிருந்து பாலை பிடுங்கி ஷாமிக்கு  குடுத்தார். கை மேல் பலன். முதல் பந்திலேயே பாலன்ஸ், வெளியே போன பந்தை நக்கி அவுட் ஆனார். (தமிழில் nick என்பதற்கு நக்குதல் பொருத்தமான வார்த்தை தானே ?). இதோ வந்துட்டேன் என்று சிலிர்த்தெழுந்த இஷாந்த் லாவகமாக பந்தை உள்ளே கொண்டு வர ஆப் ஸ்டம்ப் இழந்தார் பெல். அரௌண்ட் விக்கெட் வந்து ஆப் ஸ்டம்பில் குத்தி நேராக்கிய பந்தை சமாளிக்க முடியாமல் வெளியேறினார் குக். 72/4.சொற்ப ஓவர்களை ரூட்-மொயின் அலி ஜோடி ஒரு வழியாக ஆடி முடித்து.105/4.

இங்கிலாந்த் 5ஆம் நாள் ஆட்டத்தில் தப்பிப் பிழைப்பது தெய்வாதீனம் ! வருண பகவான் கை குடுக்கலாம். கடைசியாக லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா வென்றது 1986ல். அந்த மாட்சில் ஆட்ட நாயகன் கபில்தேவ். அந்த கபில்தேவ் மணி அடித்த நேரம் இந்தியா லார்ட்சில் அடுத்த வெற்றியை எட்டும் என்றே தோன்றுகிறது.

கடைசியில் அதிங்கபிரசங்கி தனமாக இந்த பாட்டை இந்திய அணிக்கு அர்பணிக்கிறேன் !


Wednesday, April 2, 2014

போ இன்று நீயாக



"மழை எப்பொழுது பொழியுமென்று தெரியாது.ஆனால் எதிர்பாராத நேரத்தில் பெய்து குளிர்விக்கும்.காதலும் அது போன்றுதான்.எப்பொழுது நிகழும் என்று தெரியாது.ஆனால் எதிர்பாராத நேரத்தில் பெய்து உனை ஆச்சர்யபடுத்தும் ! "

ப்லோக்போஸ்ட்ல்  இதை படித்துகொண்டிருந்த போதுதான் அவன் அவளை முதன் முறையாக பார்த்தான். ஆபீஸ் பஸ்ஸில் தயங்கி தயங்கி ஏறினால். "TCS  நியூ ஜாய்னீ . சிறுசேரி ஆபீஸ் போற பஸ் இது தானே. சாரி எனக்கு இன்னும் ID  கார்ட் வர்ல. சிறுசேரி ஆபீஸ்ல எந்த பிளாக்ல நிக்கும் ?". டிரைவர் கியர் மாற்றியவாறே சிரித்துகொண்டே சொன்னான் "போய் சீட்ல ஒக்காருமா".

மறுநாள் அவன் தினமும் ஏறும் ஸ்டாப்பிற்கு அவளும் வந்தால். அவள் ஏதேச்சையாக சொன்ன ஹாய்க்கு அவன் பதில் சொல்லவில்லை. மறுநாள் பஸ்ஸிற்கு  காத்திருக்கையில் அவளே வந்து கேட்டால் "ஆபீஸ் பஸ் மிஸ் பண்ணிட்டா என்ன பண்ணுவிங்க". அவன் வேண்டா வெறுப்பாக சொன்ன பதிலை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. "லீவ் போட்டு வீட்ல படுத்து தூங்குவேன்க."

ஆனால் அவள் விடும்பாடாக  இல்லை. மற்றொரு நாள் கேட்டால் "நேத்து இந்தியா தோது போச்சு".

 "என்ன சொல்றிங்க"

"நேத்து இந்தியா T20 மேட்ச்ல தொத்துடுசில"

 "நான் கிரிக்கெட் பாக்கறது இல்லை"

 "ஓ..."

ஒவ்வோர் அழகான பெண்ணும் தன்னை அடையாள படுத்த ஏதுனும் ஒரு செய்கை வைத்திருப்பால். அவளது அழகு குறிப்பாக அவனுக்கு அந்த "ஓ..." அவனுக்கு பட்டது.

கோடை மழை சிறிதாக பெய்து பெரிதாக ஏமாற்றத்தை தரும். அவள் இரண்டு வாரங்களாக பஸ்சில் வராதது அவனுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அவனது  பஸ் பயணங்கள் பொழுதுபோகாத அந்நியர்கள் எழுதிய ப்ளாக் போஸ்ட் படிப்பதில் மீண்டும் கழிய தொடங்கியது.

எதிர்பாராத நேரத்தில் முதுகில் தட்டியது போன்று அவள் மீண்டும் அன்று பஸ் ஸ்டாப்பிற்கு  வந்தால்.

"ரொம்ப நாளா காணும்". 

"பஸ்ஸ மிஸ் பண்ணிட்டு வீட்ல படுத்து தூங்கிட்டேன்"
"ஓ ..."

அவளுடுய முத்திரை அழகு குறிப்பை பிம்பம் போல பார்த்ததும் அவளை தாங்க முடியாமல் சிரித்துவிட்டாள்.

"போன மாசம் ஒரு பாய் ப்ரெண்ட் கிடைச்சான். அவன்தான்  என்னை டெய்லி ஆபீஸ்ல ட்ராப் பண்ணி பிக்கப் பண்ணிடுருந்தான்.நேத்து பிரேக்அப்  ஆயிடுச்சு. அதான்  இன்னைக்கு பஸ்ல."

பிக்கப்-ட்ராப்  என்ற பாமர வாக்கியத்தின் பொருள் விளக்கத்தை மூன்று வரிகளில்அழகாக சொல்லி முடித்திருந்தால்.

"உங்கிட்ட பைக் இருக்கா ?"

"பெட்ரோல் விலை ஏரிடுச்சுனு வாங்கல "

"ஓ ...".

அந்த சனிக்கிழமை காலை எப்போதும் போல என்ன செய்வது என்று தெரியாமல் எழுந்தான். செய்தித்தாளின் முதல் பக்கத்தில் விளம்பரம்.

 


விளம்பரத்தில் இருந்த ஷோரூம் முகவரியை கவனமாக குறித்து கொண்டான். ஏதோ ஒரு ப்ளாக் போஸ்டில் படித்த வரி நினைவுக்கு வந்தது.

"காதல், வழுக்கி விழுவதை  போன்றது. எதிர்பாராத நேரத்தில் விழ வைத்து நம்மை சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைக்கும்" 

Saturday, March 29, 2014

பதினெட்டாம் கொலை



பயம் ! மனிதனுக்கு படைக்கப்பட்ட முக்கியமான உளவியல் கூறு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கொலைகாரன்,காமுகன்,இனவெறியன் ஒளிந்திருக்கிறான். பயம் என்ற உளவியல் போர்வை விலகும் பொழுது அவன் வெளிப்படுகிறான். பயம் இல்லா உலகம் கொடும்பாவிகள் உலவும் நந்தவனமாக மாறும்.இந்த சித்தாந்தங்களை யோசிக்கவோ,போதிக்கவோ நான் ஒன்றும்  ஞானி அன்று. இதுவரை பதினேழு கொலைகள் செய்த சாதாரண நந்தவனத்தில் உலவும் ஒரு கொடும்பாவி. 

"எல்லாம் ரெடியா ?"

"பக்கா ப்லான்னிங்கு. எட்டற மணிக்கு ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு கெலம்புவன். ஒம்போது மணிவாக்ள தேனாம்பேட்டை சிக்னல் தாண்டி டீ கடை. டெய்லி நிப்பாட்டி தம் போடுவான். ஊர்கதை உலககதைனு அரைமணி  நேரமாவது  பேசுவான். நம்ம பய அதுக்குள்ள பைக்ல பெட்ரோல எடுத்துறுவான்."

"பார்ட்டி உசாரு ! சந்தேகம் வராம பண்ணனும்."

"அத பத்தி நீ கவலை படாத. நம்ம பையன் சம உசாரு. வண்டில வண்ணன்தோப்பு முக்கு வரைக்கும் போறதுக்கு பெட்ரோல் இருக்கும். அங்க வெச்சு நீ அவன போட்ரு."

கூலிக் கொலையாளிகள் கூட்டத்தில் இரண்டு விதமான நுட்பங்கள் தேவை. ஒன்று - ஒரு நபரை தொடர்ந்து சென்று அவரை கவனித்தால்,அவரது பலவினங்கள் அளவிடுதல், கொலை செய்ய சரியான இடம்,பொருள்,ஏவல்  ஆகியன திட்டமிடுதல். இதற்கு சிறிது புத்தி கூர்மையும் நிதானமும்
தேவைபடுகிறது. ஆனால் இறுதியான 'கொலை' என்ற உச்சகட்ட வன்ம செயலுக்கு மிகபெரிய ஒரு முட்டாள் தனம் தேவை. அதனால்தானோ என்னவோ இன்றுவறையில் கொலை செய்வதற்கு எனக்கு சொற்ப பணமே தரப்படுகிறது 

"பார்ட்டிக்கு எவ்ளோ வயசு இருக்கும்." என் கையில் ஒரு போட்டோவை கொடுத்துவிட்டு நகர்ந்தான். அதில் சுமார் நாற்பது வயது ஒத்த  ஒரு சாமானியன் சிரித்து  கொண்டிருந்தான்.

அன்று தனது சராசரி அரை மணிநேரம் தாண்டியும் யாருடனோ எதையோ சுவாரஸ்யமாக பேசிகொண்டிருந்தான். கடைசியாக தெரு நாய்க்கு ஒரு பிஸ்கட் துண்டை வீசி விட்டு பைக்கை செலுத்தினான். நானும் சிறிது தொலைவில் பைக்கை பின்தொடர்ந்தேன். வண்ணாந்தோப்பு  சந்து நெருங்கியது. இங்கு எங்கேனும் தான் வண்டி பெட்ரோல் வற்றி நிற்கவேண்டும். பைக் நிதானமான வேகத்தில் சென்று கொண்டே இருண்டது. அவன் வீடு சேரும் வரை.

"பைக்க லேம்ப் போஸ்ட் கீழ நிப்பாட்டி இருக்கான் . வண்டிய அங்க வெச்சு தொடறது  ரிஸ்க்குன்னு பையன்  திரும்ப வந்திட்டான். உடு! இன்னைக்கு இல்லேனா  நாளைக்கு சிக்கிடுவான். நீ ஆபீசிக்கு போய்  உன் அமௌண்ட வாங்கிக்க. அப்பரும்  கூப்பிடறேன்" செல்போன் குரல் 
அமைதயுற்றது. 

திரும்பி செல்கையில் எதிர்பாராமல் வண்டி நகர மறுத்து நின்றது. தூரத்தில் யாரோ நடந்து வருவது தெரிந்தது. அருகில் வந்தபோது தெரிந்தது - போடோவில் பார்த்த நாற்பது வயது சாமான்யன். லுங்கிக்கு மாறியிருந்தார். பேண்டில் மறைத்திருந்த தொப்பை, லுங்கியில் மறைய மறுத்து வெளிப்பட்டது. 

"என்ன தம்பி. வண்டில பெட்ரோல் இல்லையா."

மெளனமாக அவரை பார்த்தேன்.

"நைட்ல இந்த ஏரியால பங்க் எதுவும் தொரந்திருக்காதே.ஒண்ணு  பண்ணுங்க. நம்ம வீடு இங்கேர்ந்து பக்கம் தான். வண்டிய இங்கயே போட்டு  வாங்க. வீட்ல நம்ம வண்டி நிக்குது. அதல பெட்ரோல் எடுத்து பாட்டில்ல புடிச்சுகோங்க ."

இருவரும் வீடு நோக்கி நடக்கையில் கேட்டார் "தம்பிக்கு என்ன வேலை ".


Thursday, March 13, 2014

Czechoslovakia காதல்


நாம எவ்ளோவோ மூஞ்சிகள பாக்கறோம். அழு மூஞ்சி,கோண மூக்கு மூஞ்சி, கண்ணாடி போட்ட மூஞ்சி,சுமார்  மூஞ்சினு. ஆனா அழகான மூஞ்சினா  அதாங்க. பாத்த first வாட்டியே மிடில் ஸ்டம்ப் கிளீன் போல்டு.

"டேய் நாயே ! நடு ரோட்ல நின்னு கனவு கண்டுகினு இருக்கியா . வண்டிய எட்றா !"

நம்ம ஏதோ ஒரு பீலிங்க்ல இருக்கும் போது உள்ள பூந்து நாஸ்தி பண்றதுக்கே சில நாய்ங்க வாரும்.   அவன திரும்பி பாத்து மாமூலான மொரப்ப காமிச்சிட்டு , "வண்டிய எடுபோம்ல . என்ன அவசொரம் !". வண்டிய எடுத்தேன்.

அந்த டி கடேல தம்மு வாங்கிட்டு கதைய கண்டிநியு பண்றேன்...

 Czechoslovakia. படிக்கவே எவ்ளோ கஷ்டமா இருக்குல. மொதோவாட்டி கேட்டப்போ சத்தியமா அந்த ஊரு எங்க இருக்குனே தெர்லேனேன் . பொறுமையா  அவங்க ஊர் பத்தி சொன்னங்க . எனகொன்னும் மண்டெல ஏர்ல . ஆனா ஒரு விஷ்யம் மட்டும் தெளிவா புரிஞ்சிச்சு. அவங்க ஊர்ல பிகர் கூட்டம் அள்ளும் .  ஏன்னா , நம்மாளு அவ்ளோ அலகு.

மொதோ தம்மு முடிய முடிய அடுத்தத பத்த வைக்கணும். அப்பதான் ஒரு ப்லொவ் வரும். "பாஸ்... லைட்டர்  இருக்கா."

என்னா ரசனயான பொண்ணுப்பா. நாம ஊரு டி கடையில அவ்ளோ ரசனைய யாரும் டி குடிச்சு நான் பாத்தது இல்ல.வாழ்கைய இஞ்சு இஞ்சா ரசிப்பா. ஒரு நாள் கேட்டேன்,"உங்க ஊர்ல இதுலாம் இல்லையா.எத பாத்தாலும் ஓவரா பீல் பண்ற ".

ஏதோ ஒண்ணு இங்கிலிஷ்ல சொன்னா. கூட்டி கொறச்சு பாத்தா அதோட தமிழ் translation ," எங்க ஊர்ல நீ இல்லையே !".

மூணு மாசம் ஒடிச்சு. ப்ரெண்ட்ஷிபா,லவ்வா  என்ன எழவுன்னெ தெரியாம ஒடிச்சு. திடிர்னு ஒரு நாள், "Come with me to my county"னா.

ஹோட்டல்ல ஒரு வடைக்கு மட்டும் டோக்கன் வாங்கிட்டு ஒக்காரும் போது, சர்வர் எவனுக்கோ போக வேண்டிய காப்பிய நம்ம டேபிள்ல வெச்சதும் கூச்ச படாம குடிச்சிட்டு வர கோஷ்டி  தான். இருந்தாலும் மனசு ஏதோ சொல்லிச்சு. உனுக்கு இந்த தேனாம்பேட்ட தான் சரின்னு."Madam ! No ! Me happy only in Tenampet ! Me no coming !"

அவ ஊருக்கு போற வரைக்கும் அத பத்தி பேசவே இல்ல. ஆனா ஏர்போர்ட்ல வெச்சு தாங்க முடியாம கேட்டேபுட்டேன், " Can I kiss you !".

ஒரு அஞ்சு செகண்ட் அவ ஒண்ணுமே சொல்லல. அப்பரும் என்ன நெனச்சலோ தெரியல. அடிச்சா பாருங்க ஒரு லிப் கிஸ்ஸு ! சாமி !

ஆறு மாசம் அப்டியே சுத்திகிட்டு இருந்தேன்.  அப்பப்ப தோணும். அவ கூட அவ ஊருக்கே போயிருகனும்னு.  ஒவ்வரு நாலும்  தூங்க கண்ண  மூடும் போதும் அவ மூஞ்சு கண்ல வரும்.

எவ்ளோ நாள் தான் அப்டியே இருக்கறது. வீட்ல ஒரு பொண்ணு பாத்தாங்க. எல்லாமே கட கடன்னு முடிஞ்சிடிச்சு. பர்ஸ்ட்  நைட் - பிரண்ட்ஸ்லாம் பயங்கரமா பச்சை பச்சையா கலாய்கறாங்க. ஆனா எனக்கு மட்டும் ஏதோ ஒரு மாதிரி இருந்திச்சு. கவித தெரிஞ்ச பிரண்டு ஒருத்தர் சொன்னாரு, " உதடுகள் பிரிந்தாலும், எச்சில் இன்னும் காயவில்லை".

எப்டி சொன்னேன்லாம் ஞாபகம் இல்ல. ஆனா அன்னைக்கே ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்த கதைய அப்டியெ  detail மாறாம அவள்ட சொல்லிட்டேன். என்ன சொல்லுவாலோனு கீழ குனிஞ்சு உக்காந்திருந்தேன்.

அவ ரொம்ப சிம்ப்ளா,
 "நாளைக்கு காலைல பேசிக்கலாமா" னு படுத்து தூங்கிட்டா.

எப்டி எப்டியோ react பண்ணுவான்னு யோசிச்சேன். ஆனா இப்டி ஒரு reaction சத்தியமா யோசிக்கல.

பாத்திங்களா. என் கதைய  சொல்ல சொல்ல அந்த தேனம்பேட்ட சிக்னல்ல ஏன் நின்னுகிட்டு இருந்தேன்னு சொல்ல மறன்டேன். ஒன்ற வரசத்துக்கு  அப்புறம் நம்ம madam ஊருக்கு வந்திருக்காங்க. எப்டியோ நம்ம phone  number கண்டுபுட்ச்சி பேசிச்சு. என்னனமோ பேசிச்சு. கடைசியா, "I want to see you" னுச்சு.

பாக்கறதுக்கு மேடம் இன்னும் அப்டியேதான் இருந்தாங்க. நான் தான் ரொம்ப கருத்து போய்டேன்னு பீல் பண்ணாங்க. கலம்பர நேரத்தல கேட்டாங்க,"Can I kiss you ".

யோசிக்காம சொன்னேன், "No madam. I marry man. One life. one wife.போனா  வாட்டி அடிச்சா கிஸ் ஈரமே இன்னும் காயல...

...அப்புறோம் ... இனிமே  சென்னை வந்திங்கனா தயவு எனக்கு செஞ்சி என்ன பாக்கதீங்க. Happy Journey."

போடாங்க முட்டா டேஷ்னு நீங்க சொல்றது காதுல உழுவுது. ஆனா என்னவோங்க. இந்த மனசு சொல்லுது. இந்த தேனம்பேட்ட தான் நமக்கு சரின்னு.

இந்த பீலிங்கோட தான் சிக்னல்ல நின்னுட்டு இருந்தேன். அந்த பாடு ஹோர்ன் அடிச்சு காண்டு பண்ணிட்டான். விடுங்க. அவனுக்கு என்ன பீலிங்கோ !

அன்னக்கி first  night கு அப்றோம்  நம்ம wife  மேல ஒரு பயங்கரமான லவ் வந்திருச்சுங்க. காலைல எந்திருச்சு பாக்கும் போது ரூம்ல அவங்க இல்ல. வெளிய வந்தா வீட்ல எல்லாரும் அழுதிட்டு இருக்காங்க. அன்னைக்கு சாயங்காலம் வக்கீல் நோட்டீஸ் வந்துச்சு. டைவோர்ஸ் கேட்டு. ஆனா சத்தியமா அவங்க மேல கோவம் வர்லேங்க. பாஸ்... லவ் பண்றவங்க மேல எப்டி பாஸ் கோவம் வரும்.

ஒரு வருஷமா அவங்க என்ன புரிஞ்சு பாங்கனு வெயிட் பண்றேன். புரிஞ்சுபாங்க. என்ன கொஞ்சம் லேட் ஆவுது. அவ்ளோ தான். எல்லோரும் பொண்டாட்டிய பர்ஸ்ல போட்டாவா வெச்சு லவ் பண்றான். நான் மனசுல வெச்சி லவ் பண்றேன் பாஸ் ...


Sunday, March 31, 2013

என்னவள் அழகோவியம்



என்னவள் அழகோவியம் !

வரைந்தேன் பொடி கோலமாய்
அய்யகோ ! அழித்தது காற்று !

வரைந்தேன் மாக்கோலமாய்
பொய்யென பெய்தது மழை !

தகாது இந்த சோகம்
வரைந்தேன் என்னவளை
என் மனம் யெனும் பாறையில் !

அய்யகோ ! அவள் கடைக்கண் பார்வையில்
என் மனப்பாறையும்  உருகிற்றே !

ஆன்மாவின் புலம்பல்


உள்ளாடை வாங்கச் சென்றோம்
என்ன நிறத்தில் வேண்டுமய்யா ?
வெள்ளை தவிர்த்திடுங்கள் கறைபடும்
உறைத்தான் என் நண்பன்;

அதோ சாலையில் அங்கோர் போராட்டம்
அருகியதில் விளங்கியது
ரத்த பூமியில் உழலும் தமிழர்க்கு
பொங்கி எழுந்த எம்தமிழர்
வா நண்பா தோள் கொடுப்போம் என்றேன்
தோலை உரித்திடுவான் காவலன்
ஏன் வம்பு விலகி நில்
எட்டி நடந்தோம் சாலையில் ;

உள்ளாடையில் கறை தவிர்க்க நினைத்தீர்
மனக்கறை அகற்றல் என்றோ !
ஆன்மாவின் புலம்பல் !

Wednesday, March 27, 2013

எங்கள் அண்ணன் பிறந்தான்


கண்ணனின் பிறப்போ எட்டு
எம் அண்ணனின் பிறப்போ இருபத்தெட்டு
நீர் வசிப்பது நியூ செர்சி
மறவாதே நம் தாய் படைத்த நயம் சம்பா அரிசி
ஒபாமாவை அப்பப்போ நிணை
நம் அப்பா அம்மாவே இப்பவும் எப்பவும் நமக்கு துணை
உம் வாழ்வில் சேர வேண்டும் துணை
என துதித்தேன் நிதம் முருகனை

நம் வாழ்வியலுக்கு நான்கு மறைகள்
இதோ இங்குறைப்பேன் உம் இளவல்
தினம் படித்திடு பக்கங்கள் நான்கு
அனுதினம் துதித்திடு பகலவனை நிமிடங்கள் மூன்று
அகம் புறம் உணர்வாய் இரண்டென்று
நமக்கு தெய்வம் துணை ஒன்றுண்டு
தீம்தன தீம்தன தத்தோம்!

Tuesday, March 26, 2013

கிரிக்கெட்டில் பொதிந்துள்ள ஹிந்துத்வம்

(கிரிக்கெட்டில் பொதிந்துள்ள ஹிந்துத்வம்)

இந்த தலைப்பை படித்தவுடன் அமாவாசைக்கும் அப்துல்காதற்கும் என்ன தொடர்பு என்றோ, கருணாநிதிக்கும் இலங்கை தமிழர்க்கும் என்ன தொடர்பு என்றோ நீங்கள் நினைப்பது என் மணக்கண் முன்னே விரிகிறது. என் அய்யன் பாரதியை கூட பார்ப்பான் கவிழன் என்று பிதற்றிய சமூகத்தில் மேற்சொன்ன உயர்கருப்பொருள் பால் துவேஷம் கொள்வதில் வியப்பில்லை. எனினும் மறைபொருளை உருபொருளாக வெளிச்சத்திற்கு கொணர்வது இக்கடுரையாலனின் தார்மீக பொருப்பே என்பதையும் உணர்வேன்.

கிரிக்கெட்டில் பொதிந்துள்ள ஹிந்துத்வம் சார் கருத்துக்களை விளம்புவதே இக்கட்டுரையின் நோக்கு. சரி, ஹிந்துத்வம் ஆழ்பொருலானது யாது என்று பல்அறி ஞர்களும் தளும்பும் அளவு விளம்பியதன் சாரம் - "உடல் என்னும் காயத்துல் உயிர் எனும் உயர் பொருள் ஆட்கொண்டு சிந்தனை என்னும் விசையால் சித்தம் நோக்கி பயணிப்பதே". சுபி அறி மக்களும் "வாழ்கை என்பது ஒரு பயணம். இலக்கன்றேல் !" என்று கூறியதன் உட்பொருள் இதுவோ என்று உங்களுக்கு வியப்பு எற்படவில்லையேல் மீண்டும் மேற்சொன் வாக்கியத்தை படித்து அக கலிப்படைவீர். இதை எழுதும் பொது சாஸ்வதமாக "நான் எழுதுவது எனக்கே புரியவில்லையே" என்று என் எழுத்து குறியோன் தயங்கி நிற்க.

எதையும் இலகுவாக்குவதற்கு பாட்டை கைகொள்வது தமிழர் மறை. ராஜா அவர்கள் "பாட்டாலே புத்தி சொன்னான்" என்றார். ஆகவே ஹிந்துத்வத்தின் சாரத்தை லகு உரைக்க இங்கொரு வெண்பா இயற்றுதல் தவிர்க்க முடியாதது.

காயத்தின் ஊடதே கபாலம் தன்வாயிலே
தற்பொருள் உயிருனும் ஆண்டதே - சிந்தனையின்
விசை கொண்டு பெரும்கடலாம் வாழ்விதனை
சித்தம் எய்தவே கடதல்.

திருக்குவளை சேர்ந்த நடேசன், மேற்சொன் (வெண்)மந்திரத்தை தினம் வெறும் வயிற்றில் பதினோரு முறை இயம்பியதில் அவர் மலச்சிக்கல் நீங்கியதாய் ஒரு செவிவழி செய்தி உண்டு. சரி, மேற்சொன் சூத்திரம் கிரிக்கெட்டில் எவ்வகை உகும். இதை விளக்க நான் ஒரு சராசரி இந்திய மட்டைவிலாச ரசிகனாக உறும கிடவேன். கண்ணம்மாபேட்டை கபாலியானலும் சரி, சப்டர்ஜங்க் குறுக்கு சந்து ஹர்ப்ரீத் சிங் ஆனாலும் சரி, அவனை கிரிக்கெட்டின் பால் காமுற செய்வது மட்டை அடித்தாலே. இதையே சிறுவர்கள் ஓசி காஜி ஆடியபின் "அய்யகோ ! இருட்டிவிட்டது !" என்று ஓடுவதில் காணலாம். இவ்வகை மாண்புகள் பொருந்திய மட்டையடித்தலின் சூட்சமம் என்ன ?

மட்டையாலன் மட்டைகொண்டு பந்து எனும் சூலத்தை திறன் கொண்டு தழுவி ஓட்டத்தை பெறுதல். முல்லை முல்லால் தான் எடுக்க வேண்டும். மேற்சொன் ஹிந்துத்வ வெண்பாவை உறும, யாம் கிரிக்கெட் வெண்பாவை அருளினோம்.

சுழன்று வருமாயதொரு பந்தினையே மட்டையெனும்
உயர் பொருளாம் உயிர்க்கவே கால் பொதித்து
தழுவிடுவார் மட்டைமாந்தர் ஓட்டம் எனும்
பரம்பொருளை எய்து வெல்வார்.
மேற்சொன் கிரிக்கேடோ மந்திரத்தை கவுதம கம்பீரன் தினம் தூக்கத்தில் பிதற்றி இந்திய அணியில் யவ்வகையெனும் புக பெரும் தவம் இருப்பதாய் கிரிகின்போ மையம் கூறுகிறது. மட்டைமனிதன் என்பதை தவிர்த்து மட்டைமாந்தர் என உரைத்து இருபாலர் அபிமானத்தையும் பெற வினவுகிறேன்.

ஆகவே, இந்த இரண்டு சூத்திரங்களையும் ஒப்பு நோக்குகையில் மட்டைமாந்தர் என்னும் உடலும், மட்டை எனும் உயிரும், சரியாக கால்போதி விசையின் சித்தத்தால் ஓட்டம் என்னும் சித்த நிலையை எய்துவர்.சுரங்கச்சொல்லி விளக்குதல் என்னும் ஹனுமன் தோத்திரத்தின் பால் யான் உவகைஉல்லதல் கீழ் வண்ணப்படம் கொண்டு இந்த ஆய்வு கட்டுரை முடிக்கக் கடவேன்.

Monday, March 25, 2013

White is the color of revenge - India - Australia 2013

A look at the cricketic melodrama that unfolded in the India Australia series 2013.

I'm deliberately skipping the "You did not do your homework" fiasco, as it has very little cricketing sense to talk about.

#Captaincy blooper - Opportunity presented, Opportunity lost 
Chepauk,1st test, Day 3, Indian 1st Innings:: 

Dhoni walks in with the match evenly poised. India are 196 runs behind Australia with six wickets in hand. Ideal situation for Clarke to dismiss Dhoni cheap and ensure his morale and hence Indian team morale stays checked. Remember, India were defeated in the last series against Englishmen. Dhoni decides to handle the situation his own way - all guns blazing with risky slog sweeps across and races to an eventful run a ball 25.Now comes the blooper from Mr.Clarke. Dhoni was clearly uncomfortable playing Lyon defensively at least till that point (25 balls) in his innings. He was going hard at the forward defense and at least thrice, the ball flew precariously to the right of Cowan at square short leg. Clarke could have opted to either move Cowan finer in his short-leg position or position an additional fielder at finer short-leg.  Instead, he decides to have a spread field. Precisely what Dhoni wants. Dhoni could now put aside the risky slog sweeps and resort to his more comfortable way of back foot nudges and big hits down the ground.

As history tells us now, Dhoni went on to play the most charismatic innings ever by an Indian Captain and romped India home with a masterly 224.Clarke report card read - Opportunity presented, Opportunity lost !

#Master('s) stroke
Chepauk,1st test, Day 5, Indian 2nd Innings::

Sachin walks into a packed stadium. The crowd is bizarre realising it could be the last they get to see of the master in whites at Chepauk. Sachin has very little pressure on him in terms of match situation.India needing a mere 14 to draw first blood in the series. What unfolded in the middle was something extraordinary even for his standards. He wanks the first ball he faces of Nathan Lyon over long-on. That's not it.He again thrashes the next ball deep into long-on fence. Sachin scorecard read 12(2) . Sachin is a complete professional to do to something like this as a freak show. What he did over the two balls was a well planned move. Sachin realised that Lyon could be the only potent spin weapon in Australian armory. And best way to nullify it - thrash him out of confidence. And that's what exactly Sachin did over the two balls at Chepauk.

If you are still unsure if the move worked, read this - Lyon was dropped from playing eleven for the Second test at Hyderabad

#Out stumped, Out-thought
Mohali,3rd test, Day 2, Australia 1st Innings::


After much of public debate and pressure, Clarke decides to promote himself up to No.3 in batting order for Mohali Test. It was a relatively sane match situation for him to come in with Australia at 139/1. He is first up up against Jadeja. His nemesis so far in the series, having dismissed him thrice in the last four innings. More importantly, he was dismissed bowled by Jadeja on all three occasions. 
Clarke is well prepared for the situation. As Jadeja releases the ball, Clarke jumps out dancing straight down the wicket anticipating an arm ball sliding in to him. Jadeja finally comes of age in whites - out thinks Clarke - throws one wide of Clarke's arc - Clarke is stranded down the middle as Dhoni whips off the bails.

R Jadeja - Have we finally got the all-rounder for Indian conditions ?

#I had my revenge - Lion('s) share
Kotla,4th test, Day 3, India 2nd Innings::


As was the case in Chepauk, Sachin walks into a jubilant Kotla crowd. History is on the verge of being made on multiple counts. On personal front, the stakes cannot be any higher for Little Master. It could perhaps be his final test innings in India. The match situation is a cake walk. India need 41 runs with 8 wickets in hand. Perfect set-piece situation to ride India to historic test victory and bid adieu on glory. But as they say, things happen to go wrong at the worst possible moment. And fittingly, the hero in the anti-climax is Mr.Lyon. Yes, the poor offie who the mumbaiker had thrashed of the park and squad in Chepauk. But now, Lyon is back in the squad and bowling with vengeance  Perhaps, he is all built up to deliver the killer blow to the master. Lyon around the wicket - and this is what Cricinfo commentary read on 25.3
25.3 89.0 kph, lbw! Tendulkar's fallen to Lyon for the second time in the game. The ball was fuller and Tendulkar came forward to turn the ball on the leg side. It hit him in front of middle after pitching just outside off and the umpire took his time before sending him on his way. Hawkeye

As like a true master, Sachin walks back to pavilion without a semblance of disregard. Form is temporary,class is permanent.



Monday, December 31, 2012

மரபியம்

' Can you hear me ? '

There was ruffled noises followed by metallic chaos of voices. Shreyas  instinctively brought down the volume on his headset.

He now spoke into his microphone, 'OK. Let me go one at a time. I see six greens on my Skype window. I will call out the display names -   Comayagua.'

' I expect the participant with display name Comyagua  to reply me on the microphone.'

'Yes, this is Comyagua here.Loud and clear'. Comyagua was not making any secret of his military service back ground. There was no need for it. Everyone on this call was anonymous. You lived by your shadows on the cyber world.

There was a smile on Shreya's face. 'Thank you Comyagua'.

Shreyas read through the list - Phrenicia, Nyasar, Grenadines, Frelimo, Aksum. Each time he was confirmed of the presence with a metallic yes on the microphone. He had made sure the Skype chat voice filter was encoded. All they could hear on the headsets was digitised version of the speakers original voice.

'Thank you for confirming your presence. Needless to say, thank you for the interest you have on what we got to share with you all today.'

Shreyas let a brief moment of silence to sink in before continuing.

'I have an eighth participant on this call, who is hidden from the participant list you see.'

Perick Zander counted seven greens on his computer screen. The six names the coordinator had called out and one more - Alkaber. Perick assumed it to be the name of the coordinator himself.

'Rudra, can you hear me ?'

There was sound of heavy breathing on microphone followed by a crisp "Yes".

'Thank you. I had tried to set the context for this call on the email sent to all earlier this week.'

Maurilo Sante gazed through the mail on this iPad. Whoever was this coordinator, he had great eye for sensibility. The mail was in Italian. The only language Maurilo could understand in any form. He had saved Maurilo the pain of searching for a translator. Thus making sure the information was kept as safe as possible within the group.

"I believe our friend Rudra is going to explain all this in detail to us tonight'. Shreyas paused for a moment before adding, 'or may be day, depending on what time zone you are in.'

There was an electronic jitter on the headphones. Fadil Garath assumed it be the muffled laugh of someone on the microphone. He could see green light turning to amber against whoever was speaking in to microphone. Fadil had turned himself in mute mode. Whatever he was hearing on microphone was getting transcripted on his screen in his native dialect. He did not plan to speak much tonight. He was all ears. Those were his instructions.

Rudra was getting impatient at his desk. He brought down the air condition temperature a notch. It was early in the day, but he was already feeling the heat of it.

Shreyas continued, 'Now, I'm going to let Rudra take over. Please,can we all get into mute mode on our microphones. If you need to interrupt Rudra at any point, press the outstretched hand symbol on the top right corner. Rudra will take your cue and stop himself to listen to you.'

"Its over to you Rudra.'

Rudra waited for all the participants to get into mute mode. He was in no hurry. All his life and work had taught him to be patient. He could now see all seven in mute mode. Rudra cleared his voice, checked on his microphones one final time before getting into presenter mode.

Duff Angus heard a controlled electronic voice on his headphone. There was no way for him to make out the identity of the presenter from the electronic voice. But the rapid scrolling of text in Spanish across his large LCD screen was gripping.

Rudra had started on his trademark poetic note

அணுவின் தன்மை அறிந்து
தன்மையில் ஞாலம் புகுத்தி
சாலத்தே பயில்வன  பயின்று
பயிற்றால் அண்டம் அளந்து 
அளவினை அளவே சுருக்கி
ஆளுமை இவையன தெறிந்து
மரபின் மரன் பிறழாமல் 
அணுவை காண்பதுவே மரபியம் 

... மரபியம் தொடரும்


Sunday, November 27, 2011

Climax Sequence explained

Climax sequence explained







Flat wankhade pitch,where batsman can cut on front foot and flick on backfoot... Sachin walks into bat..breezes to 70...I open facebook ...typing - "wankhade to witness mother of all hundreds.."...about to hit post...have a hunch to check score - cricinfo - update - Sachin - lbw - Rampaul... I come back to facebook - confused what to do with the post...

Now, if the sequence ends here it is anti climax...

Read on -

I go back to cricinfo - update - " historic event happening here. Sammy calls back Sachin as it was clear in the replays that there was a big inside edge before the ball hits the pads. Well done Sammy. Billion hearts starts beating again."

If the sequence ends here it is happy climax...

If the sequence ends with a press meet with BCCI announcing that they will use DRS from now on... And a huge crowd clapping to it...guess what.. it is Shankar movie climax

Pages